Breaking News

அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு : சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
0
அவசரப் பயணத்திற்கு வெளியூர் செல்லும் பயணிகள் துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


கொரானா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்று ஊருக்குச் செல்லலாம் என முன்பு  தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவசரப் இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் எனவும் 

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback