Breaking News

அப்பாடா !! மக்களுக்கு நல்லசெய்தி : கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

அட்மின் மீடியா
0
சீனாவில்  வுஹான் மாகனத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி பலர் பலியாகியுள்ளார்கள்




உலக நாடுகளில் பல இதற்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன ஆனால் முடியவில்லை அதேபோல்  கடந்த ஜனவரி மாதம் முதல் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனையை அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை தொடங்கியது. 



மூன்று மாத கால ஆராய்ச்சிக்கு பிறகு தற்போது கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து கூடிய விரைவில்  அங்கீகாரம் பெற்று பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது அதிகார பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது 

அட்மின் மீடியா ஆதாரம்



.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback