Breaking News

144 தடை உத்தரவு அரசின் கட்டுபாடுகள் என்ன ? விதிமுறைகள் என்ன? - தமிழக அரசு அறிவிப்பு.

அட்மின் மீடியா
1
தமிழக அரசு 144 தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு அறிவித்த அறிவிப்பாணைகள்:




1. அனைத்து அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும்

2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி

3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்

4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்

5. மார்ச் 16ம் தேதி வரை முன்பதிவு செய்த திருமணங்களை  நடத்தலாம்  திருமண நிகழ்வில் 30 பேர் மட்டுமே கூடலாம் என கட்டுப்பாடு விதிப்பு

6, டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்

7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்

8. 5 பேருக்கு மேல் கூட தடை

9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 

10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம். 

11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.

12. பிளஸ் 2 தேர்வு  திட்டமிட்டப்படி நடைபெறும்

13, அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்படும்

13. பேருந்துகள் இயங்காது மற்றும்  வாடகை கார், ஷேர் ஆட்டோ, ஆட்டோ  ரிக்‌ஷா போன்ற தனியார் சேவைக்கு அனுமதி மறுப்பு

14. உணவகங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி

15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்

16. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.

17.  அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி

18. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை

19. மரண ஊர்திக்கு தடை இல்லை

20. அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும்

21. அனைத்து கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு

22.அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

23.மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வந்த வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் 

24. பொது மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் தூரத்தில் இருப்பது அவசியம்

இந்த 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் ஏப்ரல் 1 வரை  அமலில் இருக்கும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments