Breaking News

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் துவங்கியது மற்றுமொரு ஷாஹின்பாக்

அட்மின் மீடியா
0
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக  குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஷாஹின்பாக் பகுதியில் தொடர் போராட்டம் கடந்த 2 மாதங்களை தாண்டி நடைபெற்று வருகின்றது


இந்நிலையில் அதேபோல் டெல்லி ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று இரவு 22.02.2020 முதல் போராட்டம் துவங்கியுள்ளது


தில்லி ஜாஃப்ராபாத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback