Breaking News

நெல்லை ஷாஹீன்பாக் 13 வது நாளாக தொடரும் போராட்டம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் கடந்த 8 ம் தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் 

இன்று  13 வது நாளாக தொடர்கின்றது


போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போராட்டக்குழுவினர் பார்த்துக்கொள்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்க்கு பல கட்சிகள், இயக்கங்கள் ,சமூக ஆர்வலர்கள் சாதி மத பேதமின்றி ஆதரவு அளித்து வருகின்றனர்.

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback