இறுதி கட்டத்தில் சுர்ஜித் மீட்புபணி....
அட்மின் மீடியா
0
நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் முயற்சியாக, ஆழ்த்துளை கிணற்றுக்கு 2 மீட்டர் தொலைவில் 98 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணியை ரிக் கருவி மூலம் மேற்கொண்டு வருகின்றனர்
76 மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மீட்பு பணியில், புதிதாக தோண்டப்பட்டு வரும் குழிக்குள் கடுமையான பாறைகள் இருப்பதால் 35 அடி ஆழத்திற்கு பிறகு போர்வெல் மூலம் பாறைகளில் 6 துளைகள் போடப்பட்டது.
அதன் பிறகு மீண்டும் ரிக் கருவியின் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணி 65 அடி ஆழம் வரை தற்போது சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது
குழந்தையை மீட்கும் முன்னெச்சரிக்கையாக, இந்த புதிய குழிக்குள் அஜித் என்ற வீரரை, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி வழியாக இறக்கப்பட்டார்
குழியின் 65 அடி வரை சென்ற அவர் ரிக் இயந்திரம் மூலம் துளையிட சிரமமாக இருந்த பாறை ஒன்றை சோதனைக்காக எடுத்து வந்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் குழிக்குள் இறங்கும் வீரரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 98 அடி ஆழம் வரைக்கும் தோண்டப்படவுள்ள இந்த திட்டம் தற்போது 65 அடியை கடந்துள்ளது
இன்னும் பத்து மணி நேரத்தில் 98 அடியை எட்டிவிடலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பாறைகளை கடந்து விட்டதால், விரைவில் முழு நிர்ணயிக்கப்பட்ட அடிக்கு குழியை தோண்டி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது