Breaking News

சோப்பு வாங்கினால் பைக், கார், இலவசம், சதுரங்க வேட்டை பானியில் ஏமாற்றிய கும்பல் கைது

அட்மின் மீடியா
0
சதுரங்க வேட்டை சினிமா பாணியில்  ஏமாந்து  ரூ.55 ஆயிரத்தைப் இழந்த குடும்பம் .வசமாகச் சிக்கிய மோசடி கும்பல்




புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராசு இவர் வீட்டிற்க்கு வந்த  இருவர் தங்கராசுவிடம், நாங்கள் சோப்பு வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் சோப்பு வாங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும். அந்த கூப்பனில் எந்தப் பொருள் உள்ளதோ, அதனை பரிசாக இலவசமாக வழங்குவோம் என்று கூறியுள்ளார்கள்.

இதையடுத்து தங்கராசு, சோப்பு ஒன்றை வாங்கி, அதில் இருந்த கூப்பனை பிரித்து பார்த்தபோது அதில் இண்டக்ஸன் ஸ்டவ் பரிசு விழுந்துள்ளது

இதனால் மகிழ்ச்சியடைந்த தங்கராசுவிடம் இண்டக்சன் ஸ்டவ் அடுப்பை பரிசாக வழங்கினர். 


மேலும் அவரிடம், நாங்கள் இன்னும் சில தினங்களில் புதிய கம்பெனி திறக்கவுள்ளோம் என்று கூறியவர்கள் இரண்டு நாள் கழித்து உங்களுக்கு குலுக்கல் முறையில்  மோட்டார் சைக்கிள் பரிசு விழுந்துள்ளது என்றனர்.

ஸ்டவ் அடுப்பை பரிசாக தந்ததால் மோட்டார் சைக்கிளையும் தந்து விடுவார்கள் என்று எண்ணிய தங்கராசுவிடம், 2 பேரும் மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.14 ஆயிரத்து 750 நீங்கள் கட்ட வேண்டும். அதற்கான பணத்தை தந்தால் நாங்கள் நாளையே உங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து தருவோம் என்றனர்.


அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.14,750/- பணத்தை வங்கி மூலம் செலுத்தியுள்ளார். மறுநாள் பைக் வரும் என்ற ஆசையில் இருந்த அவருக்கு மீண்டும் அவரது ஆசையை தூண்டும் விதமாக உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரம் என்னிடம் இல்லை என்று கூறிவிட்டதால், அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். 

தங்கராசுவைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட இந்த இருவரும், அவருக்கு அளவுக்கு அதிகமாக ஆசையை காட்டினர். இந்த ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய தங்கராசு, ரூ.45 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அதனைப் பெற்றுக்கொண்ட இருவரும் , நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

மறுநாள் தங்கராசுவை தொடர்பு கொண்டு பேசிய இருவரும் நாங்கள் உங்களுக்கு பரிசாக தர காரில் வந்து கொண்டிருந்தோம். ஆனால் வழியில் சோதனை நடத்திய போலிசார், காருக்கான ஆவணங்களை கேட்டனர். புதிய கார் என்பதால் எங்களிடம் ஆவணங்கள் இல்லை.

எனவே அதற்கு அபராதமாக ரூ.20,000 செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறுகிறார். நாங்கள் அவ்வளவு பணம் எடுத்துவரவில்லை. நீங்கள் அந்த பணத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம். பணத்தை நேரில் வந்து கொடுத்தாலும் சரி அல்லது வங்கி கணக்கில் செலுத்தினாலும் சரி, உங்களுக்கு எப்படி வசதிப்படுகிறதோ? அதுபோல் செய்யுங்கள் என்றனர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


இதுகுறித்து அறந்தாங்கி போலிஸாரிடம் புகார் செய்தார். உடனே மோசடி கும்பலை கையும், களவுமாகப் பிடிக்க நினைத்த போலிஸார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்துச் சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கிப் பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளார் அங்கு நிண்ரிருந்த 2 பேரிடம் பணத்தை கொடுக்கும் போது அங்கு வந்த போலிஸார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரனையில் அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த சண்முகைய்யா என்பவரின் மகன் காந்தீஸ்வரன்,மற்றும் இசக்கி முத்து அவர்களின் மகன்  பேச்சிமுத்து என்று தெரிய வந்துள்ளது

சதுரங்கவேட்டை  சினிமா பட பாணியில்  சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி ஆசையை தூண்டிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் எனவே பொதுமக்கள் அனைவரும் இது போன்ற மோசடி கும்பலிடம் உஷாராக இருக்க அட்மின் மீடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம்.

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback