Breaking News

குழந்தையை மீட்கும் கருவி கண்டுபிடிப்பாளர்களுக்கு 5 லட்சம் பரிசு- தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்தான். அவனை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

கடைசியல் சுஜித்தின் உடலை சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு அவன் விழுந்த ஆழ்துளை குழாய் வழியாகவே மீட்டனர்.


இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

சுஜித்  இறப்புக்கு பின்பு தமிழக அரசு இது போல் வெளியிட்ட அறிவிப்பு மூலம் பல தன்னார்வலர்கள், கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் கண்டு பிடிப்புகளை அரசுக்கு தெரிவிக்கலாம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback