எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம் - புதிய சேவை அமலுக்கு வந்தது
அட்மின் மீடியா
0
எந்த வங்கியில் உங்கள் கணக்கு இருந்தாலும் இனி தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம் - புதிய சேவை அமலுக்கு வந்தது
கடந்த மாதம் வரை தபால் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பெறும் நிலை இருந்தது.ஆனால் தற்போது இந்த சேவை அனைத்து வங்கி வாடிக்கையாளரும் பணம் பெரும் அளவிற்க்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
அதாவது எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அவர் இனிமேல் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம்.
இந்த புதிய வசதி கடந்த 1-ந்தேதி முதல் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது
