Breaking News

சவுதி நிலத்தடியில் வற்றாத ஆறு ஓடுகின்றதா உண்மையா?

அட்மின் மீடியா
0

 கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்து வருனின்றார்கள்




அந்த செய்தியில் சவுதி அரேபியாவின் புராய்தா பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் 19 மீட்டர் ஆழத்தில் சாலை தோண்டுகையில் நிலத்தடி ஆறுகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்  சுபானல்லாஹி வபிஹம்திஹி  அல்லாஹ் எவ்வளவு பரிபூரணன்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸரத் அபூஹுரைரா ரலியல்லாஹுத்தாலா அன்ஹூ அவர்கள் கூறியதாவது


“அரேபியர்களின் நிலம் மீண்டும் புல்வெளிகளாகவும் ஆறுகளாகவும் மாறும் வரை யுக முடிவு தொடங்காது. . ”

ஆதாரம் முஸ்லிம் கிதாபு (157) ல் விவரிக்கப்பட்டது என்று பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

மேலும்  அந்த செய்தி கடந்த 2016 ம ஆண்டு நடந்தது ஆகும்


அப்படியானால் அங்கு நீர் வர காரணம் என்ன?
பொதுவாக அரேபிய பூமிகளில் குழி தோண்டும் போது, நம்மூரில் போல குழியில் மண் இருக்காது. பாறைகளாக தான் இருக்கும். வீடு கட்ட அஸ்திவாரம் போட குழி தோண்டினாலே சில இடங்களில் தண்ணீர் கசிந்து பெருக்கடுத்து இருக்கும், அந்த நீரை கட்டுமான பணிக்கு கூட பயன்படுத்தாமல் மோட்டார் வைத்து வெளியேற்றுவார்கள். அதுமட்டுமின்றி வீட்டு உயோகத்திற்கு பயன்படுத்திய தண்ணீரை செப்டிக் டேங்க் கட்டி அதிலிருந்து கழிவு நீர் எடுக்கும் டேங்கர் லாரியில் நிரப்பி ஒதுக்குபுறம்மான வெட்ட வெளி பாலைவனத்தில் கொட்டுவார்கள்.

அதே போன்ற தண்ணீர் தான் சவுதி அரேபியாவின் புராய்தா பகுதியில் கட்டுமான பணிக்காக 19 மீட்டர் ஆளத்தில் தோண்டும் போது தண்ணீர் வந்துள்ளது.

இது 2016 ல் நடந்த சம்பவம். உண்மையில் நிலத்தடி ஆறுகள் இருப்பதாக இருந்தால் இந்த மூன்று வருடங்களாக நீர் வரத்து குறையாமல் பெருக்கெடுத்து வந்திருக்கும், புராய்தா மாகாணம் முழுவதற்கும் தண்ணீர் வினியோகம் நடந்திருக்கும்.

இது எதனால் நடந்துள்ளது என்பதை தெள்ள தெளிவாக சவுதி ஆய்வாளர் ஒருவர் விளக்குகிறார். அதில்



அட்மின் மீடியா ஆதாரம் 1

https://www.youtube.com/watch?v=8kTt03-hd9Q
  

அட்மின் மீடியா ஆதாரம்2

https://www.youtube.com/watch?v=WP7N9dr8GW0


மேலும் மேலே உள்ள செய்தியில் உள்ள ஹதிஸ் எண் தவறானது ஆகும்


அதாவது அந்த ஹதீஸ் எண் நூல் : முஸ்லிம் 157 என்று போடபட்டுள்ளது.

ஆனால் ஹதீஸ் எண் 1681 ஆகும்

உலகம் அழியும் (கியாமத்) நாளின் அடையாளம் என்று

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

நூல் : முஸ்லிம் 1681

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback