Breaking News

வயதானலும் வீரம் குறையாத வயதான தம்பதியினர் : மெர்சல் காட்டி கொள்ளையர்களை விரட்டி அடித்த வீடியோ

அட்மின் மீடியா
0


நெல்லை மாவட்டம் கல்யாணிபுரத்தில் சண்முகவேலுவும், அவரது மனைவி செந்தாமரை இருவரும் தனியே வசித்து வருகின்றார்கள்



ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டின் முன்புறம் நாற்காலியில் சண்முகவேலு ஓய்வாக அமர்ந்துக்கொண்டிருக்க, அவரின் பின் பக்கமிருந்து ஒரு முகமூடித்திருடன் அவரின் கழுத்தில் துணடைப் போட்டு இறுக்கி பிடித்து கொண்டான், அவரின் அலறல் சப்தம் கேட்டு வீட்டின் உள்ளேயிருந்து செந்தாமரை வெளியே வந்து பார்த்தால் இரண்டு முகமூடி திருடர்கள் உடனே சம்யோசிதமாக செயல் பட்ட செந்தாமரை கையில் கிடைத்த செருப்பு, சேர், என அனைத்தையும் அவன் மீது தூக்கி வீசுகிறார்.

திருடன் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கசங்கிலி சிக்கிக்கொள்ளவே எஸ்கேப்பாகினர் இருவரும்.!

  
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல்நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணைதொடங்கியுள்ளார்கள்



அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு


https://www.youtube.com/watch?v=gMNoTJxm41U

Give Us Your Feedback