Breaking News

டெல்லி போலிஸார் போராட்டம் நடத்தியவர்களை சுட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்ன வென்றால் டெல்லியில் அமைதியாக நடந்த தலித் போராட்டத்தில் போலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய காட்சி என்று ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா அந்த செய்தி உண்மையா ? பொய்யா ? என்ன நடந்தது? எங்கு நடந்தது? எப்போழுது நடந்தது? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்கள் ? துப்பாக்கி சூட்டில் யாராவது பலியானார்களா? என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த வீடியோவில் எமது சந்தேகம் 1

அந்த வீடியோவில் வீடியோ எடுக்கும் நபர் துப்பாக்கி சூடு நடத்தியவுடன் சிரித்து கொண்டே வீடியோ எடுக்கின்றார்

 சந்தேகம் 2

துப்பாக்கி சூடு நடத்தியவுடன் அங்கு இருக்கும் பொதுமக்கள் யாரும் ஓடவில்லை, போலிஸார் கலவரக்காரர்களை நோக்கி ஓடும்போதும் அவர்கள் ஓடவில்லை


அபபடியானால் உண்மை என்ன ?

அந்த சம்பவம் ஓர் ஒத்திகை நிகழ்ச்சியாகும்

அந்த சம்பவம் கடந்த  01.11.2017  அன்று நடந்தது

அந்த சம்பவம் நடந்த இடம் ஜார்கண்ட் மாநிலம் கவுந்தி போலிஸார் நடத்தியது

 அட்மின் மீடியா ஆதாரம்

https://www.youtube.com/watch?time_continue=3&v=T1i1sTTsXF8

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback