நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை: எதனால்?
அட்மின் மீடியா
0
கடந்த வாரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்பகுதியில் கடல் அலைகள் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். இதனைக் காண பெரும் மக்கள் கூட்டம் கூடியது.
ஆனால், எதனால் இதுபோன்று நீல நிற அலைகள் உருவானது என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது
இப்படி கடல் நீல நிறத்தில் ஒளிரும் தன்மைக்கு ‘பயோலூமினிசென்ஸ்' என்று பெயர்
பயைலூமினிசென்ட் ஃபைட்டோபிளாங்டான் என்கிற பாசி உயிரினத்தால் இந்த மின்னும் தன்மை உருவாகிறது. அதாவது கடலில் வாழும் மின் மினி பூச்சி என்றே சொல்லலாம்
கடலில் இருக்கும் அலைகள் கரையைத் தொடும்போது, இந்த பாசிகள் தங்களது வேதியல் ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும். இதனால் நீல நிறத்தில் அவை ஒளிரும். இது பரவலாக ‘கடல் ஒளிர்வு' என்றழைக்கப்படுகிறது.
இந்த பயோலூமினிசென்ட் ஒளிர்வு, மாலத்தீவுகளிலும் கலிபோர்னியாவிலும் சென்ற ஆண்டு காணப்பட்டது.
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.youtube.com/watch?v=Fvob6L8q3I8
Tags: மறுப்பு செய்தி
