பயங்கரவாதிகள் புகைப்படம் காவல்துறை வெளியிட்டார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு
கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானது.
ஆனால் இது போல் புகைபடங்களை நாங்கள் வெளியிடவில்லை என போலீசார் மறுத்துள்ளனர்.
லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை, தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை மீடியாக்கள்வெளியிட்டது
தீவிரவாதிகளின் என வெளியான 2 புகைப்படங்களும் தவறானது எனத் போலிஸார் தெரிவித்த நிலையில்,. மத்திய உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Tags: முக்கிய செய்தி
