ஜம்மு காஷ்மீரில் 144 வாபஸ்: இயல்பு நிலைக்கு திரும்புகின்றது: பள்ளி கல்லூரிகள் திறப்பு
அட்மின் மீடியா
0
காஷ்மீரில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370, வது பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்2019- சட்டத்தின் கீழ் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக துணை மாஜிஸ்திரேட் சுஷ்மா சவுகான் அறிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படவேண்டும் எனவும் அறிவிப்பு
முடக்கப்பட்ட இணையதள சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் ஆகியவை இன்று நடைமுறைக்கு வந்தது.
