Breaking News

மங்களூருவில் பிச்சை எடுக்கும் அழகான சிறுமி படம்! – உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0


கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு அழகான சிறுமியை தமிழகத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க வைப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 


அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது

சந்தேகம் 1


இந்த சிறுமியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி போல இல்லை.


சந்தேகம் 2

கையில் உள்ள தட்டில் ரூபாய் நோட்டுக்களாக இருந்தன. அந்த பணத்தை பெரியதாக்கி பார்த்த போது  நோட்டில் காந்தி படத்துக்கு பதில் வேறு ஒருவர் படம் இருந்தது. இதன் மூலம் இந்த பணம் இந்திய ரூபாய் இல்லை என்று தெரிந்தது.

 அதனால், இந்த சிறுமி வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகம் தோன்றியது.

ஆம் அந்த சிறுமி பங்களாதேசத்தை சேர்ந்தவர். அந்த சிறுமின் தட்டில் உள்ள பணமும் பங்களாதேசத்து பணம் தான்

இந்த குழந்தை பற்றி https://wabnews24.com/  என்ற வங்காளதேசத்து இனையதளத்தில் வங்காள மொழியில் விளக்கம் அளித்திருந்தார்கள் அதனை நமது அட்மின் மீடியா குழு தமிழில் விளக்கம் அளித்துள்ளது


அந்த அழகு குழந்தையின் பெயர் : நுபூர்

தாயார் பெயர்: அக்லிமா பேகம்

தந்தை பெயர் : அபுல் மியா

ஆகியோரின் இளைய மகள்

அந்த சிறுமி அந்த பகுதியில் பிறந்து, அந்த பகுதியில் வளர்ந்து வருவதாக தெரிவித்திருந்தனர்.

 ஆனால், பிச்சை எடுக்கும் படம் உண்மையா, உண்மையில் அந்த சிறுமி பிச்சை எடுக்கிறாரா என்று எந்த தகவலும் அதில் இல்லை. 

மேலும் குழந்தையின் சமீபத்திய படமும் அந்த இனையத்தில் வெளியிடபட்டுள்ளது. த்ற்போது குழந்தை பெற்றோர் வசம் உள்ளது




ஆதாரம்



Give Us Your Feedback