Breaking News

700 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ரயில் அதிர்ச்சி தரும் வீடியோ

அட்மின் மீடியா
0
மும்பை வெள்ளத்தில் சிக்கிய மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் உள்ள 700 பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது.

மும்பை அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரிலிருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது. இந்த ரயில், பத்லாப்பூர்-வாங்கனி ரயில் நிலையம் இடையே தற்போது நிற்கிறது. இந்த ரயிலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 700 பயணிகள் இருக்கின்றார்கள்
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து அவர்களை மீட்பதற்காக 3 படகுகளில் பேரிடர் மீட்பு படையினர் அந்த இடம் நோக்கி விரைந்தனர். அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.



https://www.youtube.com/watch?v=Dlxtu2GDEwc





https://www.youtube.com/watch?v=iQX4EuHham8


இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்


Give Us Your Feedback