சந்திராயன் 2 அனுப்பிய புகைபடம் உண்மை என்ன ?
அட்மின் மீடியா
1
நிலவிற்க்கு சென்ற சந்திராயன் 2 விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் வைரலாக ஒரு புகைப்படம் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது
அந்த தகவல் உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
மேலே உள்ள புகைபட தகவல் பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம்
அவை அனைத்தும் போட்டோ ஷாப் செய்யபட்டவை
எந்த நாடுமே இதுவரை கால்பதிக்காத நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை தயார் செய்தது. நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய செய்வதற்காக சந்திரயான்-2 உருவாக்கப்பட்டது
மேலும் கடந்த்க 22.07.2019 அன்றுதான் வின்கலன் விண்னில் ஏவப்பட்டது சந்திராயன் 2 விண்கலம் இன்னும் நிலவை சென்றடையவில்லை
அதன் புவி வட்டபாதையில் தான் இன்னும் சென்றுகொண்டுகின்றது
சந்திராயன் 2 விண்கலம் ஆகஸ்டு மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் 10 ம் தேதி நிலவிற்க்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கபடுகின்றது
அப்படி என்றால் இன்னும் நிலவிற்க்கே செல்லாத சந்திராயன் நிலவினை எப்படி போட்டோ எடுக்கும்
நம்ம இஸ்ரே விஞ்ஞானிகளை விட நம்ம நெட்டிசன் விஞ்ஞானிகள் செலவு இல்லாமல் போட்டோ எடுத்து விட்டார்கள்......
ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்
Tags: மறுப்பு செய்தி



