Breaking News

5ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் இனி பொது தேர்வு மத்திய அரசு

அட்மின் மீடியா
0
5ம் வகுப்பு மற்றும்  8-ம் வகுப்புகளுக்கும் இனி பொதுத் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு..! 



இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை தற்போது நிறைவேற்றி அரசிதழில் வெளியிடபட்டுள்ளது

தற்போது, 1 முதல் 8-ம் வகுப்புவரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று 2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்க வேண்டும் என மத்திய அரசு தனது அரசிதழில் அறிவித்துள்ளது. 

அந்த அரசிதழில் "5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்வில் மாணவர்கள் தோல்வியடைந்தால் அடுத்த இரண்டு மாதங்களிலேயே மீண்டும் வரும் தேர்வில் பங்கேற்றுத் தோல்வியடைந்த பாடங்களை எழுதிக் கொள்ளலாம். 

அந்தத் தேர்விலும் மாணவர் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

 
 
 
 


Give Us Your Feedback