Breaking News

காவல் ஆய்வாளரால் 10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை

அட்மின் மீடியா
0

காவல் ஆய்வாளரால் 10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை


சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போஸ்கோ சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு வயது 57 என்பவர் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.  நேற்று இரவு வில்லிவாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர் வாசு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

அந்த சம்பவத்தின் போது கதறி அழுத சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றினர். அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற உதவி ஆய்வாளர் வாசுவை பிடித்து அந்த இடத்திலேயே தர்மஅடி கொடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

அந்த குழந்தையிடம்  விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிந்து உதவி ஆய்வாளர் வாசுவை கைது செய்துள்ளனர்.


மேலும் உடனுக்குடன் அட்மின் மீடியா செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா  வாட்ஸப் குரூப்பில் இணைந்துகொள்ளுங்கள் குரூப்பில் இணைய  கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html 

Give Us Your Feedback