Breaking News

அரபிக்கடலில் உருவானது லூபன் புயல்

அட்மின் மீடியா
0
அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்த புயலுக்கு லூபன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. லூபன் புயல் ஓமனில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.


அடுத்த 2 நாட்களில் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.



மேலும் அதிகாரபூர்வமான வானிலை செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_29.html 



லூபன் புயல் நேரடி சாட்டிலட் காட்சியை காண  கீழே கிளிக் செய்யுங்கள்


https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_15.html

Give Us Your Feedback