Breaking News

ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை

அட்மின் மீடியா
0
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.




சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் ஐகோர்ட்டில், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உரிமை இல்லை. என்றும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் மணு அளித்தும் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முறையான நிபந்தனைகள் பின்பற்றாமல், ஆன்லைனில் பட்டாசு விற்கப்படுகிறது.  மேலும் ஆன்லைன் மூலம் அதிகளவில் சீனப்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Give Us Your Feedback