Breaking News

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது

அட்மின் மீடியா
0

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. 

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது இடஒதுக்கீடு வழங்க கூடாது என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு எதிராக மத்திய அரசும், பல சிறுபான்மையினர் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களாக நடந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏழு நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

 2006ல் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான். அரசு வேலைவாய்ப்பில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று தீர்ப்பளிக்கப்ட்டு இருக்கிறது.


*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*

*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*

*பதிவுநாள்: 26.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback