Breaking News

ஆதார்கார்டு செல்லுமா ? முழு விவரம்

அட்மின் மீடியா
0

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது. 
 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.
அதே சமயம்  பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்


மேலும்

வங்கி சேவைக்கு

செல்போன் சேவைக்கு

கல்வி சேவைக்கு

போன்றவற்றிற்க்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.


தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.


தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.

நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.

ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. என்று எச்சரித்துள்ளது.

வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.

ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது. என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.


 *•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*


*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*

*பதிவுநாள்: 26.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*ADMIN ⓂEDIA*



Give Us Your Feedback