இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்கள் பங்கு
அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு
பலர் மறந்து விட்ட வரலாறு
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சுதந்திர போராட்டத்தில் நம் இஸ்லாமியர்களின் பங்கு
இஸ்லாமியர்கள் இல்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்காது என்றுகூறினார்களே வரலாற்று அறிஞர்கள் தெரியுமா உங்களுக்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர்.
அவர்களது மொத்த மக்கள் தொகையை விட விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதைவிட அதிகமாகவே இருந்தது.
என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் கூறுகிறார். (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் கூறுகிறார். (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
இந்தியா சுதந்திரம் பெற தன் இன்னுயிரையும் இழந்த லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் தியாகங்கள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்திய மண்ணின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும் பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்று தெரியுமா உங்களுக்கு
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சொல்லலாம் சொல்லலாம் சொல்லி கொண்டே இருக்கலாம் அத்தனை வீர வரலாறு உள்ளது.
உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு மட்டுமே அடிமைமனிதன் சக மனிதனுக்கு அடிமையாக்க கூடாது என்ற இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றிய அன்றைய இஸ்லாமிய சுதந்திர வீரர்கள்
இந்திய மக்கள் விடுதலைக்காக வீரத்துடன் பெரும் போர்களையும், தியாகங்களையும் சந்தித்துள்ளனர்.அந்த வீர வரலாற்றை அனைவருக்கும் தெரிவிப்பதே நம் நோக்கம்.இந்திய நாடு எங்கள் நாடு, நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை திட்டமிட்டு மறைத்து,
இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளுக்கு நம் தியாகத்தினை அடையாளம் காட்டுவோம்.
Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு