விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ air india flight 855 crash video
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் குடியிருப்புகள் நிறைந்த மேகானி நகர் என்னும் பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
முழு அளவில் எரிபொருள் இருந்த காரணத்தினால் தான் கீழே விழுந்ததும் பயங்கரமாக விமானம் வெடித்து சிதறியுள்ளது. விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் லண்டன் செல்ல வேண்டியது என்பதால் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது air india flight 855 crash video
விமானம், மருத்துவ விடுதியின் மீது விழுந்ததால் அங்குள்ளவர்களும் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர் மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.சுமார் 90 மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அகமதாபாத் விமானம் விழுந்ததில் இதுவரை 242 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது. .
விமானியின் எச்சரிக்கை:-
விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்ததும் அபாயத்தை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டுள்ளார். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து 1.38 மணிக்கு MAY DAY எனப்படும் அபாயத்தை தெரிவிக்கும் சிக்னலை விமானி அனுப்பியுள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பதில் வருவதற்கு முன்னரே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துள்ளது.
மே டே கால் என்றால், ஒரு விமானமோ, கப்பலோ ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில், அதனை இயக்குபவரால், கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் சமிக்ஞையாகும்.
இது மிக ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதை சொல்லும் தகவலாகும். எனவே விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால்தான், கடைசி நேரத்தில் நடந்தது குறித்து தெரிய வரும் .
வீடியோ பார்க்க:-
விழுந்து நொறுங்கிய விமானம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-
https://x.com/adminmedia1/status/1933187409891758116
பரபரப்பு நிமிடங்கள்... பயங்கர சத்தத்துடன் பூகம்பமே வந்திருச்சுனு நினைச்சேன்.. விமானம் விழுந்ததை நேரில் பார்த்தவர்!By Monika K Jun 12, 2025, 18:20 ISTபரபரப்பு நிமிடங்கள்... பயங்கர சத்தத்துடன் பூகம்பமே வந்திருச்சுனு நினைச்சேன்.. விமானம் விழுந்ததை நேரில் பார்த்தவர்!அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான விபத்தை நேரில் சென்று பார்த்தவர் சொன்ன வார்த்தைகள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்தின் சத்தம் பூகம்பம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைத்துவிட்டதாக கூறினார். அத்துடன் எங்கும் விமான பாகங்களும், சடலங்களும் இருந்ததாக கூறியுள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சிக்னலை இழந்த நிலையில், அடுத்த சில நொடிகளில் மேகானி நகரில் அமைந்துள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து நொறுங்கி இருக்கிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தமாக 242 அதாவது 7 குழந்தைகள் உட்பட 230 பயணிகளும், 2 பைலட் மற்றும் 10 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதில் 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மிகவும் கொடூரமான விபத்து என்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.கோர விமான விபத்து... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் விரைகிறார்!விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக மே டே அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விமான கட்டுப்பாட்டை இழந்து அபாயகரமான நேரங்களில் கொடுக்கப்படுவதே இந்த மே டே அலர்ட். இந்த அலர்ட் கொடுக்கப்பட்ட சில நொடிகளிலேயே வானில் கரும்புகை எழுந்தது.இந்த நிலையில் விமான விபத்தை நேரில் பார்த்த ஒருவர் விமானம் மோதி வெடித்து சிதறிய சத்தத்தால் பூகம்பம் வந்துவிட்டதோ என அதிர்ச்சி அடைந்துவிட்டேன். வீட்டில் இருந்து பின்னர் வெளியில் வந்து பார்த்த போது, கரும்புகை சூழ்ந்திருந்தன. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போது, எங்கு பார்த்தாலும் விமான பாகங்களும், மனித உடல்களும் சிதறி கிடந்தன. மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவருந்தி கொண்டிருந்த மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் வானத்தில் பறக்கத் தொடங்கும்முன்பே, 825 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 17 வினாடிகள் ஓடும் அந்த விடியோ, விமானம் எவ்வாறு விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்த போது, வானில் கரும்புகை மேலெழும்பிய காட்சிகளும் வெளியாகியிருக்கிறது.
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ