முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,, B.pharm, D.pharm, சான்றிதழ் உள்ளவர்கள் http://muthalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://mudhalvarmarundhagam.tn.gov.in/project
மருந்தகம் அமைக்க ரூ.3 லட்சம் ரொக்கமாக மற்றும் மருந்துகளாக) வழங்கப்படும்.
TABCEDCO, TAHDCO, TAMCO பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு,
ரூ. 1.50 லட்சம் மதிப்பில் மருந்துகளாக மானியம் வழங்கப்படும்.
110 சதுரஅடி (10 Sqm) இடம் தேவை.
சொந்த இடத்திற்கு சொத்துவரி, குடிநீர், மின் இணைப்பு ரசீது வேண்டும்.
வாடகை இடத்திற்கு வாடகை ஒப்பந்தம் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம்" அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில்,
"பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்கள்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா. ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
Tags: தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு
