சவூதி அமீரகத்தில் பிறை தென்பட்டதால் வெள்ளிக்கிழமை ஈத் அல் பித்ர் பெருநாள் அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் இன்று மாலை ஏப்ரல் 20 வியாழக்கிழமை அன்று ஷவ்வால் பிறை இன்று பிறை காணப்பட்டதால் ஏப்ரல் 21 (நாளை) ஈத் அல் பித்ர் தினமாக கொண்டாடப்படும் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது
அதேபோல் அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் நாளை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
தமிழகத்தில் ஷவ்வால் மாதம் பற்றிய அறிவிப்பு.
பிறை தேட வேண்டிய நாளான 20.04.2023 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 21.04.2023 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 22.04.2023 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் அறிவித்துள்ளது
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்