கோவை கருத்தம்பட்டி அருகே கவனக்குறைவால் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கணபதி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் - மல்லிகாதம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்று காலை மல்லிகா பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது சோமனூர் சாலையை கடக்க முயன்றபோது, அவரது இருசக்கர வாகனம் மீது, அந்த வழியாக கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டதில் மல்லிகா, அவரது 2 பிள்ளைகளும் காயமடைந்தனர்.
அதேபோல், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மாணவர்களும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ
Tags: வைரல் வீடியோ