Breaking News

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு



கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

டான்ஜெட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக உள்ள ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர குமார், நீரஜ் மிட்டல், பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கே.கோபால் ஆகியோருக்கும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback