அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை முழு விவரம் rain update
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். மேலும் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்