தீப திருவிழாவை ஒட்டி டிசம்பர் 6 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Tiruvannamalai
அட்மின் மீடியா
0
தீப திருவிழாவை ஒட்டி டிசம்பர் 6 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Tiruvannamalai
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை தீப திருவிழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்
Tags: தமிழக செய்திகள்