பாம்பிடமிருந்து தன் குழந்தையை காப்பாற்றிய தாய் - சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
வீட்டில் இருந்து வெளியே வர தன் தாயுடன் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கின்றான்.
அப்போது அந்த வீட்டு வாசலின் படியில் ஒரு பாம்பு சென்று கொண்டு உள்ளது. இதனை கவனிக்காத அந்த சிறுவன் அந்த பாம்பின் மீது மிதிக்க பார்த்த நிலையில், அந்த பாம்பு உடனடியாக சிறிது தூரம் பின்வாங்கிவிட்டு பின்னர் அந்த சிறுவனை கொத்த வருகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த தாய் ஒரு நொடியில் உடனடியாக சிறுவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு ஓடுகின்றார். இந்த வீடியோ எதிர்வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ