Breaking News

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் சோதனை முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 


சென்னை அமைந்தகரையில் தலைமை இடமாக கொண்டு ஆருத்திரா கோல்ட் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பி ராஜசேகரன் என்பவர் ஆவார். 

தமிழகத்தில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமையகம் சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வருகிறதுஇந்த நிறுவனம் நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் தொடர்பாக இருபத்தி ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதையடுத்து, இந்த நிறுவனத்தின் 8 இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சோதனையில லேப்டாப்புகள், செல்போன்கள்,தங்க நகை, மற்றும் 3.41 ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளிவந்துள்ளன

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback