விசித்திர வழக்கு:- குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும்: மகன்,மருமகள் மீது பெற்றோர் வழக்குபதிவு
விசித்திர வழக்கு:- குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும்: மகன்,மருமகள் மீது பெற்றோர் வழக்குபதிவு
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.பிரசாத். இவரது மகனுக்கு 2016 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லைஇந்நிலையில் எஸ்.ஆர்.பிரசாத் உத்தரகாண்ட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில்
எனக்கு ஒரே மகன்தான் அவனை வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் பயிற்சி எடுத்து கொள்ளவும் ஏராளமான பணம் செலவழித்துள்ளேன். சுமார் 2 கோடி செலவு செய்து விமானி ஆக்கினேன்
மேலும் அவனுக்கு 2016ல் திருமணம் செய்துவைத்தேன்,அவர்களை
தாய்லாந்துக்கு தேனிலவு அனுப்பினேன்.என் மகனுக்கு திருமணம் செய்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்களை பற்றியும் கவலைப்படவில்லை.
வங்கி கடன் பெற்று வீடுகட்டி உள்ளேன்.இப்போது பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே இன்னும் ஒரு வருடத்தில் பேரக்குழந்தை பெற்று தரவேண்டும். இல்லாவிட்டால் மகன் 2.5 கோடி, மருமகள் 2.5 கோடியாக மொத்தம் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்
Tags: இந்திய செய்திகள்