சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை! காரணம் என்ன தெரியுமா!!!
சவுதியில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மற்றும் கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட எண்பத்தி ஒரு குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனையை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 81 பேரில் 73 பேர் சவூதி குடிமக்கள், ஏழு பேர் ஏமன் மற்றும் ஒருவர் சிரிய
நாட்டவர்.தூக்கிலிடப்பட்ட அனைவரும் சவுதி நீதிமன்றங்களில்
விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதியானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது,
சவூதி அரேபியாவில் பயங்கரவாதம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக ஒரே
நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது, இது கடந்த ஆண்டு
முழுவதும் ராஜ்யத்தில் நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனைகளை விட
அதிகமாகும்.அனைவரும் "பல கொடூரமான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள்" என்று
அதிகாரப்பூர்வ சவுதி செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது,
2016 ஆம் ஆண்டு நாற்பத்தி ஏழு பேரையும் 2019-ம் ஆண்டு முப்பத்தி ஏழு பேரையும் ஒரே நேரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்