Breaking News

நாளை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மைய அறிவிப்பு...

அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் நாளை மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

30.12.2021 இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. 

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும

31.12.2021 நாளை கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 வானிலை ஆய்வுமைய அறிக்கை

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback