Breaking News

வானியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

அட்மின் மீடியா
0
வானியம்பாடியில் முன்னாள் மாநில பொறுப்பாளர்  ஜனநாயக கட்சி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரில் வசித்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம் கடந்த 10ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீட்டுக்கு தன் 7 வயது மகனுடன் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் டில்லி குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

மற்றவர்கள் தப்பி சென்று விட்டனர். கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்ததால் முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்யசீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகியோர் சரணடைந்துள்ளனர்..

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback