வாகன பதிவு, ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
லைசென்ஸ், பர்மிட் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை கடந்த ஆண்டு பிப்.1ஆம் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்டமாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்து வருகிறது.
அதன்படி போக்குவரத்து ஆவணங்கள் அனைத்தையும் புதுப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்