டவ் - தே புயல் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்..!
டவ் - தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது.
டவ் - தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தின் திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்