தமிழக அரசின் 30% மானியத்துடன் ரூபாய் 7,50,000/- தாட்கோ கடனுதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி!!!
ஆதிதிராவிட ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தில் நலிவுற்ற ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தில்
தமிழக அரசு தாட்கோ மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டம், நிலம் வாங்கும் திட்டம், சுயஉதவித் திட்டம், துரித மின்இணைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதற்க்கு அதிகபடமாக 7,50,000/- வரையிலும் கடனுதவி வழங்கி 30% மானியத்துடன் வழங்குகின்றார்கள்
தாட்கோ கடனுதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி!!!
முதலில் http://application.tahdco.com/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லுங்கள்
அடுத்து அதில் உங்கள் மாவட்டம், மற்றும் உங்கள் விவரம் போன்றவற்றை குறிப்பிட்டு நீங்கள் எதற்காக கடனுதவியினை பெறுகிறீர்களோ அந்த திட்டத்தின் பெயரினை செலக்ட்செய்துகொள்ளுங்கள்.
அடுத்து விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், முகவரி, விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, வயது, ஆதார் எண், மதம், ஆண்டு வருமானம், குடும்ப அட்டை எண், என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து அதில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், Project Report ஸ்கேன் செய்து அப்லோடு செய்யுங்கள்
அடுத்து எந்த வங்கியில் கடனுதவி பெற வேண்டுமோ அந்த வங்கியின் பெயர், கிளையின் பெயரில் விண்ணப்பதாரரின் போட்டோ அப்லோட் செய்து சப்மிட் கொடுத்தால் உங்களுக்கு Registration எண் கொடுப்பார்கள் அவ்வளவுதான்
Tags: முக்கிய செய்தி