Breaking News

பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்த யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது

அட்மின் மீடியா
0

பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த மூவரை சென்னை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்.

பலரும் யூடியூப் சேனல் தொடங்குவது என்பது இப்போது பேஷனாகி விட்டது. அதில் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை பலர் வெளியிட்டு வருகின்றனர்

 


Chennai Talk என்ற அந்த யூடியூப் சேனலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதனையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசன் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, மற்றும் சேனலின் உரிமையாளர், தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback