முதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்
அட்மின் மீடியா
0
முதல்வன் படத்தில் வருவது போல் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி ஒருவர் இன்று (ஜனவரி 24 ஆம் தேதி) பதவியேற்கிறார்.
ஹரித்துவார் மாவட்டம், தவுலத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்ரீஸ்தி கோஸ்வாமி
இளங்கலை வேளாண்மை படித்து வரும் இவரது தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் இருக்கின்றனர்.
மேலும், கோஸ்வாமி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதல்வராக பொறுப்பில் இருக்கிறார்.
குழந்தைகளின் மேம்பாட்டுக்காக, பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து அசத்தி வரும் கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில், உத்திரகாண்ட் மாநில அரசு, அவரை ஒருநாள் முதல்வராக்கி அழகு பார்க்கிறது.
மேலும், இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால், அவர்களை கொண்டாடும் வகையில், இந்த சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது.
கோஸ்வாமிக்கு பதவியேற்பு விழாவும் நடைபெற உள்ளது.