நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் விவசாயிகள் 110 பேர் படுகொலை
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர் அப்போது அவா்களை பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.
இதில் 110 போ உயிரிழந்திருக்கலாம் என்றாலும், இதுவரை 44 உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். மேலும் அந்த பயங்கரவாத கும்பல் தங்களுடன் 15 பெண்களையும் கடத்தி சென்றுள்ளது
முன்னதாக அந்தப் பகுதியைச் சோந்தவா்கள் ஒரு போகோ பயங்கரவாதியை போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்ததற்குப் பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
source:https://www.theguardian.com/world/2020/nov/29/nigeria-attack-boko-haram-farm-workers-killed
Tags: வெளிநாட்டு செய்திகள்