மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தெரிந்து கொள்ளுங்கள்
அட்மின் மீடியா
0
தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...
- மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்
- மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
- செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்
- இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்
- இடி, மின்னலின்போது வெட்டவெளி, திறந்தவெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
- இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
பிஸ்கட்
பால்
அவசர மாத்திரைகள்
தண்ணீர் கேன்
பேட்டரி செல்கள்
மெழுகுவர்த்தி
காய்கறிகள் ,மளிகை சாமான்கள் முன்னதாக தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
- குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்
- குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்
- கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்
- பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்
- தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
- சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்
- மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை
மக்கள் நலனில் என்றும்....
Tags: தமிழக செய்திகள்