Breaking News

புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரம் தேர்தல் ஆணையம் வெளியீடு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்தல் உட்கட்டமைப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது 5 மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 


காஞ்சிபுரம் மாவட்டம்

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தது அதில் தற்போது அது காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனப் பிரிக்கப்பட்டுள்ளது அதில்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  4 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.ஆலந்தூர், 

2.ஸ்ரீபெரும்புதூர்(தனி), 

3.உத்திரமேரூர், 

4.காஞ்சிபுரம்

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகள்

 1.சோழிங்கநல்லூர், 

2.பல்லாவரம், 

3.தாம்பரம், 

4.செங்கல்பட்டு,

5.திருப்போரூர், 

6.செய்யூர் (தனி)

7.மதுராந்தகம் (தனி)

 

வேலூர் மாவட்டம்

 

முன்னதாக வேலூர் மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தது தற்போது அதில் தற்போது  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது அதில்

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகள்
விவரம்:-

1.காட்பாடி, 

2.வேலூர், 

3.அணைக்கட்டு, 

4.குடியாத்தம் (தனி)

5.கீழ்வைத்தியனான் குப்பம் (தனி), 

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  4 சட்டப்பேரவைத் தொகுதிகள்
விவரம்:-

1.அரக்கோணம் (தனி), 

2.சோளிங்கர், 

3.ராணிப்பேட்டை, 

4.ஆற்காடு

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  4 சட்டப்பேரவைத் தொகுதிகள்
விவரம்:-

1.வாணியம்பாடி, 

2.ஆம்பூர், 

3.திருப்பத்தூர், 

4.ஜோலார்பேட்டை

 

விழுப்புரம் மாவட்டம்:

 

முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தது அதில் தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது அதில்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகள்
விவரம்:-

1.செஞ்சி,

2. மைலம்,

3.திண்டிவனம் (தனி),

4.வானூர் (தனி),

5. விழுப்புரம்,

6.விக்கிரவாண்டி, 

7.திருக்கோயிலூர்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகள்
விவரம்:-

 

1.உளுந்தூர் பேட்டை, 

2.ரிஷிவந்தியம், 

3.சங்கராபுரம், 

4.கள்ளக்குறிச்சி (தனி)

 

திருநெல்வேலி மாவட்டம்:

முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில் தற்போது திருநெல்வேலி, தென்காசி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது அதில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  5 சட்டப்பேரவைத் தொகுதிகள்
விவரம்:-

1.திருநெல்வேலி, 

2.அம்பாசமுத்திரம், 

3.பாளையங்கோட்டை, 

4.நாங்குநேரி, 

5.ராதாபுரம்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் விவரம்:-

1.சங்கரன்கோவில் (தனி, 

2.வாசுதேவநல்லூர் (தனி), 

3.கடையநல்லூர், 

4.தென்காசி, 

5.ஆலங்குளம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback