Breaking News

FACT CHECK: செப்டம்பர் 25 ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தி

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  செப்டம்பர் 25 ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடும் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்த தகவல் முற்றிலும் தவறானது என மத்திய அரசு மறுத்துள்ளது

மத்திய அரசின் பத்திரிகை தகவல் ஆணையம் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம்(Press Information Bureau) மறுத்துள்ளது. மேலும் ஊரடங்கை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை” எனவும்  தெரிவித்துள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback