இனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் டைட்டான் கைகடிகார நிறுவனமும் இணைந்து ஷாப்பிங் செய்ய புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இனி நீங்கள் ஷாப்பிங் செய்த பிறகு தொகை செலுத்த எந்த டெபிட் கார்டும் அல்லது எந்த மொபைல் ஃபோன் பயன்படுத்த தேவையில்லை டைட்டன் வாட்ச் மட்டும் போதும்
ஆம் வாட்ச் நிறுவனமான Titan முதல் முறையாக இந்தியாவில் Contactless Payment) கட்டணத்தை ஆதரிக்கும் கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே Titan பேமென்ட் வாட்ச் வசதியைப் பெற முடியும். நீங்கள் 2000 ரூபாய் வரை செலுத்தினால், கடிகாரத்தைத் தட்டுவதன் மூலம், கட்டணம் செலுத்தப்படும், பின் எதுவும் தேவையில்லை,
ஆனால் 2000 ரூபாய்க்கு மேல் செலுத்தும்போது நீங்கள் பின்னை உள்ளிட வேண்டும். வழக்கமாக வைஃபை வசதியுடன் டெபிட் கார்டு செலுத்துதல்கள் போன்றே செலுத்தலாம்
Tags: தொழில்நுட்பம்