தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்