அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டும்.. சான்றிதழ் பதிவேற்ற வழிமுறை.....
அட்மின் மீடியா
0
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரியிருந்தனர்.இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த சான்றிதழ்களைப் http://tngasa.in/ என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://tngasa.in/images/Instructions%20to%20upload%20certificates.pdf
Tags: கல்வி செய்திகள்